ட்ரம்பின் அதிரடி முடிவு : சட்டம் நீக்கம்!

Thursday, June 21st, 2018

அமெரிக்காவினுள் நுழையும் அகதிக்குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் வைக்கும் சட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து, தனி சிறையில் அடைக்கும் வகையில் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு அமுலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த 1995 சிறுவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பாரிய அளவில் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த தீர்மானத்தை ரத்து செய்து ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

Related posts: