டாவின்சியின் ஓவியத்தின் உரிமையாளர் இவரா?

Tuesday, June 11th, 2019

லியோனார்டோ டாவின்சியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றை 450 மில்லியன் டொலருக்கு கைப்பற்றிய நபர் தொடர்பில் தற்போது மர்மம் விலகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு லியோனார்டோ டாவின்சியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான “Salvator Mundi” என்ற ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது.

இந்த ஓவியத்தை சாதனை விலைக்கு பெயர் வெளியிடவிரும்பாத நபர் ஒருவர் வாங்கியதாக தகவல் வெளியானது.

சுமார் 450 மில்லியன் டொலர் தொகைக்கு விலைபோன அந்த ஓவியத்தின் உரிமையாளர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

ஆனால் இறுதிவரையில் அந்த மர்மநபர் தொடர்பில் எந்ததகவலும் வெளியாகாமல் ரகசியம் காக்கப்பட்டது.

தற்போது அந்தஓவியம் சவுதிபட்டத்து இளவரசர் முகம்மது பின்சல்மானின் சகல வசதிகளும் கொண்ட உல்லாசப் படகில் பாதுகாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

500 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியமானது இளவரசர் சல்மானின் பெயரில் இன்னொரு சவுதி இளவரசர் வாங்கியதாக பிரபல பத்திரிகை அப்போதே தகவல் வெளியிட்டது.

ஆனால் அந்ததகவலை குறித்த ஓவியத்தை ஏலம் நடத்திய நிறுவனம் மறுத்திருந்தது. தற்போது எகிப்தில் உள்ள கடற்கரை நகரம் ஒன்றில் இளவர் சர்சல்மானின் படகு நிறுத்தப்பட்ட நிலையில்,

அதனுள் டாவின்சியின் Salvator Mundi ஓவியம் இருப்பதை தனியார்ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

உப்பு கலந்த கடற்காற்று 500 ஆண்டுகள் பழமையான அந்த ஓவியத்திற்கு உகந்தது அல்ல என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts: