ஜி-20 உச்சி மாநாடு – ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு!

Friday, September 8th, 2023

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

அந்த வகையில் ஸ்பெயினின் ஜனாதிபதி  பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்த நிலையில்   அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெட்ரோ சான்செஸ், “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்னால் டெல்லிக்கு செல்ல முடியாது.

அதே சமயம் முதல் துணை அதிபர் நடியா கேல்வினோ, பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஷ்ய  ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜின்பிங் ஆகியோர் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம...
நாட்டின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டது நல்லாட்சி அரசு - வ...
கடந்த மூன்று மாதங்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் - குடிவரவு மற்றும் குட...