சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசப்பணி – அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு!

Wednesday, August 19th, 2020

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசப்பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் அரசுப் பணிகள் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற சட்டம் உள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் தொழிற்சாலை,  நிறுவனங்கள் உள்பட அனைத்து வகை தொழிற்துறை வேலைவாய்ப்பிலும் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும்  சட்டமூலம் ஆந்திராவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அரசுப் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே இனிமேல் விண்ணப்பிக்க முடியும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மத்திய பிரதேச முதல்வர்,  மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும். இதற்கு ஏற்றவகையில் சட்டம் கொண்டுவரப்படும். இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்

Related posts: