சுலவேசி தீவில் படகு மூழ்க குறைந்தது 15 பேர் உயிரிழப்பு!

Monday, July 24th, 2023

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தேசிய மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது படகில் 40 பயணிகள் இருந்ததாகவும் விபத்துக்கான காரணம்இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆறு பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர் என்றும் அவர்கள் உள்ளூர் வைத்தியலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: