சீனாவில் தீ விபத்தில் 9 பேர் பலி  !

Sunday, February 18th, 2018

சீனாவில் கழிவுகள் பதப்படுத்தும் இடமொன்றில் ஏற்பட்ட தீயில் 9 பேர் பலியாகினர்.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கிங்யுவான் நகரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் பணியில் இருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சீன தீயணைப்பு படை பிரிவு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தபோதும் தீயினால் பெருமளவில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு தொழிலாளி மாத்திரம் தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை, மெக்சிக்கோவின் தலைநகரில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான சேத விபரங்களை கண்காணிப்பதற்காக மெக்சிக்கோவின் உள்ளக விவகார அமைச்சர் மற்றும் மாநில ஆகியோர் பயணித்துக்கொண்டிருந்த உலங்கு வானூர்தியே விபத்துக்கு உள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில 3 சிறுவர்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: