சீனாவில் சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!
Friday, April 5th, 2019
சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்துக்குள் வெடிவிபத்து ஏற்பட்டதில், அதனை தொடர்ந்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
Related posts:
தென் சீனக் கடற்பரப்பில் ரோந்து பணியில் சீன விமானங்கள்!
அகதிகள் முகாமை மூடக்கோரிய போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்!
ஜப்பானில் கனமழை : மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு!
|
|
|


