சீனாவின் Gansu மாகாணத்தில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!
Tuesday, December 19th, 2023சீனாவின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 220 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண நிலநடுக்க நிவாரணத் தலைமையகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் வடமேற்கு Gansu மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அந்தநாட்டு நேரப்படி நேற்று இரவு 11.59 இற்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மீட்பு பணிகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவில் முன்னதாக கடந்த ஒகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 23 பேறுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையை தாக்க வருகிறது சூறாவளி: எச்சரிக்கிறது வானிலைத் திணைக்களம்!
கிழக்கில் புதிய அரசியல் கட்சி உதயம்!
வழமைக்கு திரும்பியது தொடருந்து சேவைகள் - பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவிப்பு!
|
|
எரிவாயு வாங்குவதை நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் – ஐரோப்பிய நாடுகளுக்க...
பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - ஈராக் நாடாளுமன்ற...
சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றிருந்தால் மேன்முறையீடுகளை ஜூன் 10 ஆம் திகதி வரை அனுப்பி வைக்...