சிலியில் 34 ஆயிரத்து 500 ஏக்கரில் காட்டுத்தீ – 13 பேர் தீயில் சிக்குண்டு பலி!

Saturday, February 4th, 2023

சிலியில் கடும் வெப்பம் நிலவி வருவதன் காரணமாக வெப்பக்காற்று வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: