சிறையில் கலவரம் – 57 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 30th, 2019

பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் 41 பேர் மெத்தைகள் எரிக்கப்பட்டதில் வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: