சிரிய குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழப்பு!
Monday, February 27th, 2017
சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் அல்-பாப் மாநிலத்தில்; துருக்கி ஆதரவு படைகள் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது இன்று தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் மேற்கொண்ட கார் குண்டு தாக்குதலிலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
உஸ்பெகிஸ்தான் அதிபர் மரணம்!
வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற கத்தார் அரசு முடிவு!
உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் திட்டம்!
|
|