சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாகவும் விசாரணை – இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் வழங்கியது இஸ்ரேல்!

Saturday, January 13th, 2024

சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று சாட்சியம் வழங்கும் இஸ்ரேல், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து வாதங்களை முன்வைத்து வருகின்றது.

அந்தவகையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காஸா மீதான தமது நடவடிக்கைகள் தற்காப்பு நடவடிக்கை என சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் கூறியுள்ளது.

இதேநேரம் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் விளைவாக பிராந்தியத்தில் மோதல்கள் விரிவடைந்துள்ளதாக ஓமான் வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: