சச்சின் தெண்டுல்கரை அகற்ற மாநகராட்சி உத்தரவு!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆர்.பி.ஜி. கலை நிறுவனம் சார்பில் மும்பை மெரின் டிரைவில் சச்சின் தெண்டுல்கர் உருவம் பொறித்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்வெட்டு அமைக்கப்பட்டடிருந்தது.
இதற்கு உள்ளூர் பொதுமக்களும், சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சச்சின் தெண்டுல்கர் சிற்பத்தை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு ஆர்.பி.ஜி. கலை நிறுவனத்துக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இதன்பேரில், சிற்பத்தை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவன துணை தலைவர் சுமீத் சட்டர்ஜி தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related posts:
மேற்கு ஆபிரிக்க தலைவர்கள் காம்பியா பயணம்!
மேற்குலக நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் - ரஷ்ய அதி...
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு ஆதரவு - சீன ஜனாதிபதி சி ஜின்பிங் அறிவிப்பு!
|
|