சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக சிலி தேசிய அவசரகால மீட்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்டார்டிகா கடலோர பகுதியில் உள்ள சிலி ராணுவ தளத்தில் உள்ளவர்களை மீட்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இராணுவ தளம் பகுதியில் உள்ளவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
Related posts:
யூதர்களைக் காப்பாற்றிய ஸ்வீடன் பெண்மணி புனிதராக அறிவிக்கப்பட்டார்!
ஐ.எஸ் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில் – பிரித்தானிய “சன்” செய்தித்தாள் எச்சரிக்கை!
பொருளாதார நெருக்கடி - தொலைபேசி பயன்பாட்டிலும் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்!
|
|