கொரோனா வைரஸ்: இத்தாலியில் 100 வைத்தியர்கள் பலி!
Friday, April 10th, 2020உலக அளவில் கொரோனா வைரஸூக்கு அதிகம்பேர் பலியான நாடாக இத்தாலி திகழ்கிறது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலாக, இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 100 வைத்தியர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலையில் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர்களும் அடங்குவர் என அந்நாட்டு சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோல், 30 தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், மருத்துவ துறையில் பணியாற்றுபவர்கள் என்ற தகவலை மற்றொரு அமைப்பு வெளியிட்டுள்ளது.
Related posts:
நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து : 7 பேர் பலி!
மருத்துவமனைகளின் அபிவிருத்திக்குத் புதிய திட்டம் - சுகாதரத்திணைக்களம் !
திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும...
|
|