குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு!

Sunday, August 7th, 2016

அண்மை மாதங்களில், சமூக அமைதியின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றுக் கொண்டார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, குஜராத்தின் முதல்வராக ஆட்சி செய்த தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக விஜய் ரூபானி பார்க்கப்படுகிறார். அண்மையில், குஜராத்தில் தொடர்ச்சியாக நடந்த சாதி ரீதியான மோதல்களை அடுத்து, விஜய் ரூபானிக்கு முன்னர் குஜராத் மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல், கடந்த திங்கள் கிழமையன்று பதவி விலகினார்.

தாங்கள் மோசமாக நடத்தப்படுவது குறித்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரான தலித்துகள், அம்மாநிலத்தில் தொடர்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், நடுத்தர வகுப்பினரான பட்டேல் இனத்தவர் தங்கள் சமூகத்தினருக்கு பணியில் இட ஒதுக்கீடு கோரி பெரும் பேரணிகள் பலவற்றை நடத்தியுள்ளனர்.

Related posts: