கியூபாவில் விமான விபத்தில் 100- க்கும் மேற்பட்டோர் பலி – கியூபாவில் சோகம்!

Saturday, May 19th, 2018

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு சென்ற போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்தக்கள்ளானதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே இந்த விமான விபத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Related posts: