கியூபாவில் விமான விபத்தில் 100- க்கும் மேற்பட்டோர் பலி – கியூபாவில் சோகம்!

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு சென்ற போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்தக்கள்ளானதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே இந்த விமான விபத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|