காஷ்மீரில் இராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் கொடுக்க பாஜக வலியுறுத்தல்!

Saturday, August 27th, 2016

காஷ்மீரில் வன்முறையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்குமாறு மத்திய அரசை பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின், காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா‌ தலைவர் சதிஷ் சர்மா  இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையாளர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது என்ற அவர், பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீரில் படையினர் 68 பொதுமக்களை சுட்டுக்கொன்றுள்ள நிலையில் அவர் இந்தக்கருத்தை தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, ‌காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண உலக நாடுகள் ‌தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் அமைதி‌ ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,‌ காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காஷ்மீரில் 95 சதவிகித மக்கள் அமைதியை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்

Related posts: