காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன -துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் சுட்டிக்காட்டு!

Friday, October 27th, 2023

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் மௌனம் காப்பது மனிதகுலத்திற்கு அவமானம் என்றும் துருக்கிய ஜனாதிபதி கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக பாப்பரசர் போப் பிரான்சிஸுடன் தொலைபேசியில் கலந்துரைஐடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திர பாலஸ்தீன அரசை அமைப்பதன் மூலம் மட்டுமே மோதலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற துருக்கியின் நிலைப்பாட்டை எர்டோகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

000

Related posts: