காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன -துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் சுட்டிக்காட்டு!
Friday, October 27th, 2023காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் மௌனம் காப்பது மனிதகுலத்திற்கு அவமானம் என்றும் துருக்கிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக பாப்பரசர் போப் பிரான்சிஸுடன் தொலைபேசியில் கலந்துரைஐடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுதந்திர பாலஸ்தீன அரசை அமைப்பதன் மூலம் மட்டுமே மோதலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற துருக்கியின் நிலைப்பாட்டை எர்டோகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
000
Related posts:
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: ஹிலாரி அதிர்ச்சி தோல்வி!
10 ஆண்டுகளாக பயங்கர வெடிகுண்டை பாதுகாத்த நபர்!
உலகின் அதிக வேக புகையிரதத்தை அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்த சீனா திட்டம்!
|
|