காசா மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு – இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது துருக்கி!
Saturday, May 4th, 2024காசா பகுதியில் தாக்குதல்கள் மற்றும் உதவி வழங்குவதில் தடங்கல் ஏற்படுத்திய மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா பகுதிக்கு தேவையான அளவு உதவிகளை தடையின்றி வழங்க இஸ்ரேல் அனுமதி வழங்கும் வரை இது தொடரும் எனவும் துருக்கியின் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்தனை கடந்த ஆண்டு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் சர்வாதிகாரியாக செயற்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமெரிக்காவுக்கு வடகொரியாவின் பரிசு!
தொற்றுநோய்: ஒரு மாதத்தில் 02 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
அதி வேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹ...
|
|