காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம்வான் வழித் தாக்குதல் – 29 பேர் உயிரிழப்பு!
Wednesday, July 10th, 2024
காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல் – அவ்டா பாடசாலையை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலின் போது சுமார் 2,000 பேர் பாடசாலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4ஆவது பாடசாலை இதுவாகும்.
இந்தத் தாக்குதலை மோசமான கொலை எனத் தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
2021 ஆம் ஆண்டுமுதல் ஐரோப்பிய ஒன்றிய GSP + இன் அதே நன்மைகளை இலங்கை பெறும் - பிரித்தானியாவின் சர்வதேச ...
சீரற்ற வானிலை - சீனாவில் 33 பேர் உயிரிழப்பு!
தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் விதுர விக்ரமநா...
|
|
|


