கடந்த ஒரு மாதத்தில் டெங்கு நோயால் 133 பேர் உயிரிழப்பு!
Friday, February 1st, 2019இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதுடன், டெங்கு காய்ச்சல் தொடர்பாக 13 ஆயிரத்து 683 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட தற்போது 3 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்க டொலர்களை சேமிப்பதற்கு புடினின் தீர்மானம் உதவியது - ட்ரம்ப்
மீண்டும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம்? - வெளியாகியுள்ள எச்சரிக்கை கடிதம்!
கந்தகாடு சம்பவம் - இதுவரை 261 பேர் கைது - தேடுதல் இன்றும் தொடர்கிறது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்...
|
|