ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் படுகொலை?

Saturday, June 11th, 2016

மெக்சிகோ நாட்டின் மலைப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

El Mirador சமுதாய மக்கள் குடியிருந்துவரும் பகுதிக்கு நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 நபர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளது.

இதில் 5 பெண்களும் 4 ஆண்களும் 2 சிறுமியரும் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளனர். இரு சிறுவர்கள் துப்பாக்கி குண்டடிப்பட்ட அதிர்ச்சியில் மயக்கமுற்று கிடந்தவர்களை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உரிழந்துள்ள சம்பவத்தை அந்த நாட்டு அரசும் உறுதி செய்துள்ளது. கொலையானவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்ததால் தப்பிக்க முடியாமல் போனதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் நிகழ்த்தப்பட்ட பழிவாங்கும் செயலாக இருக்கலாம் அல்லது குடும்ப வழக்கு காரணமாக நடத்தப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என  சய்திகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த மெக்சிகோவை பொறுத்தமட்டில் Puebla பகுதியில் போதை மருந்து கடத்தல் தொடர்பான கொலைகள் குறைவுதான் என்றபோதும், இப்பகுதியில் வீடு புகுந்து படுகொலை நடத்துவது சமீப காலமாக அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: