ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் உயிருடன்: வெளியானது அதிர்ச்சி தகவல்!

Sunday, September 3rd, 2017

மேற்கு ஆசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில், ‘ஐ.எஸ் – இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்’ எனப்படும் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கும் முயற்சியில், உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், இதில் பெரும்பங்காற்றி வருகின்றன.

ஐ.எஸ்., அமைப்பின் தலைவன், அபுபக்கர் – அல் பாக்தாதி, சமீபத்தில், ரஷ்ய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை, அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது.

இதுகுறித்த அமெரிக்க ராணுவ தளபதி ஸ்டீபன் டவுன்சென்ட் நேற்று கூறியுள்ளதாவது: ஐ.எஸ்., அமைப்பின் தலைவன், அல் – பாக்தாதி கொல்லப்பட்டதாக வெளியான தகவல் வதந்தியாகவே இருக்கக் கூடும்; இதற்கு எந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை.அதேசமயம், பாக்தாதி உயிருடன் இருப்பதற்கான சில நுண்ணறிவு தடயங்கள் சிக்கியுள்ளன; உளவுத்துறை தகவல்களும் இதை உறுதி படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts: