ஐநா அமைதிப்படையின் புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிஸ் நியமனர்!
Friday, February 17th, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்பின் புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிஸ் (Jean-Pierre Lacroix) நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்சைச் சேர்ந்த இவரை ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பை வகித்து வரும் ஹெர்வ் லாட்சூஸ், எதிர்வரும் வரும் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறவிருப்பதையடுத்து, அந்தப் பதவிக்கு ஜீன்-பியர்லாக்ரோயிஸ், நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் முகாமிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
எத்தியோப்பிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை - மெர்கல் எச்சரிக்கை!
ஜல்லிக்கட்டு வன்முறை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
ஈரான் நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி!
|
|
|


