எகிப்துஎயார் விமான அனர்த்தத்திற்கு ஒரு மணித்தியாலம் முன் மர்மமான பொருள் எமது விமானத்துக்கு மேலாக பறந்தது – இரு துருக்கிய விமானசேவை விமானிகள் ?
Wednesday, May 25th, 2016எகிப்துஎயார் விமானம் மத்தியதரைக்கடலில் விழுவதற்கு ஒரு மணித் தியாலத்துக்கு முன்னர் தமது விமானத்துக்கு மேலாக என்ன வென்று அறியப்படாத மர்மமான பொருள் பறந்ததாக இரு துருக்கிய விமான சேவை விமானிகள் உரிமைகோரியுள்ளனர்
மேற்படி எயார்பஸ் ஏ320 விமானம் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து எகிப்திய கெய்ரோ நகருக்கு பயணித்த வேளை மத்தியதரைக் கடலில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்திருந்தனர்.
அந்த விமானம் எதனால் இவ்வாறு மத்தியதரைக் கடலில் விழுந்தது என்பது அறியப்படாத மர்மமாகவே தொடர்ந்து உள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் தமது பயணிகள் விமானம் இஸ்தான்புல் நகரிலுள்ள அதாதுர்க் விமான நிலையத்தை அண்மித்த வேளை தமது விமானத்துக்கு மேல் 2,000 அடியிலிருந்து 3,000 அடி உயரத்தில் மர்மமான பொருள் பச்சை நிற ஒளியுடன் பயணித்ததாக குறிப்பிட்ட இரு விமானிகளும் விமானக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தெரிவித்துள்ளதாக துருக்கியின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான ஹரியத் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பொருள் திடீரென தோன்றி திடீரென மறைந்ததாக அந்த விமானிகள் கூறியுள்ளனர்.அந்தப் பயணிகள் விமானம் துருக்கிய தலைநகரிலுள்ள சிலிவ்றி பிராந்தியத்தை நெருங்கிய வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்துஎயார் விமானம் இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அந்த இடத்திலிருந்து சுமார் 500 மைல் தொலைவில் கடலில் விழுந்துள்ளது
இந்நிலையில் துருக்கிய விமானிகள் தெரிவித்துள்ள விபரம் தொடர்பில் அந்நாட்டு விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கூறுகையில், ராடர் கருவியில் எதுவும் தென்பட்டிரு க்குமானால் அதன் அடிப்படையில் அந்த விமானிகள் எதனை அவதானித்துள்ளார்கள் என்பதைக் கூறக் கூடியதாகவிருக்கும் எனத் தெரிவித்தார்.
எகிப்து எயார் கடலில் விழுவதற்கு முன்னர் விமானத்தில் பரவிய தீயை அணைப்பதற்காக அந்த விமானத்தை அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்க அதன் விமானியான செய்த் அலி ஷுகைர் விமானக் கட்டுப்பாட்டுப் பிரிவைக் கோரியிருந்ததாக பிரான்ஸ் விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த மர்மமான பொருள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த விமான அனர்த்தத்திற்கு முன்னர் செய்த் அலி ஷுகைருக்கும் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குமிடையே பல நிமிட நேர உரையாடல் இடம்பெற்றிருந்ததாக பிரான்ஸ் எம்6 தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் இது தொடர்பில் எகிப்து எயார் விமான சேவை மறுப்புத் தெரிவித்துள்ளது அந்தச் சம்பவத்துக்கு முன்னர் விமானி விமானக் கட்டுப்பாட்டுப் பிரிவை தொடர்பு கொள்ளவில்லை என அது வலியுறுத்தியுள்ளது.
Related posts:
|
|