உலக பிரபல்யம் ஒன்று 2021 ஆண்டு வரை மூடப்படுகிறது!
Friday, May 10th, 2019உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திலுள்ள ‘பி பி லே’ எனும் தீவிலுள்ள ‘மாயா பே’ கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த கடற்கரை கடந்த வருடம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மூடப்படுவதற்கு முன்புவரை இந்த கடற்கரையில் நாள் முழுவதும் 5,000 சுற்றுலாப் பயணிகள் இருக்கும் நிலை காணப்பட்டது.
அதன் காரணமாக அந்த கடற்கரை பகுதியில் காணப்பட்ட அரிய வகை பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகி வருவதாக கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இந்த கடற்கரை பகுதியின் வாழ்க்கைச்சூழல் மென்மேலும் மேம்பாடடையும் பொருட்டு இந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
Related posts:
சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்வது கவலைக்குரியது : மேற்கு ஆஸ்திரேலியா முதல்வர்!
2017இல் பூமியில் விழும் விண்வெளி ஓடம்!
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவிப்பு!
|
|