ஈரான் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை! 

Tuesday, May 8th, 2018

தமது நாட்டுடனான அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகினால் அது வரலாற்று தவறாக அமையும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை ஈரானின் தேசிய தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி ஹசான் ருகானி விடுத்துள்ளார்.

எந்த முடிவை டிரம்ப் எடுத்தாலும் ஈரானின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் எந்த வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை.

தனது நாட்டிற்கு எவ்வளவு ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் தேவையோ அவற்றை ஈரான் உற்பத்தி செய்யும் எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானிற்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டன.

எனினும் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த உடன்படிக்கையை இரத்துச் செய்யப்போவதாகவும் ஈரானுக்கு எதிராக மீண்டும் தடைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகவும்அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: