இலண்டன் தாக்குதல்: பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு!
Monday, June 5th, 2017
இலண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயுடன் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் போது “இது போன்ற ஒரு தருணத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருக்கும்” என மக்ரோங் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் 7 பேரின் உயிரைக் காவுகொண்ட இந்தத் தாக்குதல்களில் கனேடியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காயமடைந்த 48 பேரில் இரண்டு ஜேர்மனியப் பிரஜைகளும் உள்ளடங்குவதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|