இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல் – கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேறுமாறு இந்தியா உத்தரவு!
Tuesday, September 19th, 2023இந்தியாவை தளமாகக் கொண்ட மூத்த கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (19.09.2023) கனேடிய உயர்ஸ்தானிகர் வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இராஜதந்திரி அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உள் விவகாரங்களில் கனேடிய ராஜதந்திரியின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனடாவில் சீக்கிய காலிஸ்தானிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில், இந்திய ராஜதந்திரி ஒருவரை கனேடிய அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நியூசிலாந்து தீயில் சிக்கி இலங்கையை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
பெற்றோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் - ராகுல் காந்தி!
உலக வங்கி - சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஆரம்பம்!
|
|