இரட்டை குண்டு வெடிப்பு – தாய்லாந்தில் 40 பேர் படுகாயம்!

Wednesday, May 10th, 2017

தாய்லந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் 40-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக  வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் விஷமிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்துமிடத்திலும் மற்றொரு வெடிகுண்டு வெடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த இரட்டை குண்டு வெடிப்பில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மீட்பு நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்பு குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை ஏற்பட்டதால் 18,000 பேர் உயிரிழந்தனர். அத்துடன் புகுஷிமா அணு உலையில் விபத்தும் ஏற்பட்டது நினைவுக்கூரதக்கது.

Related posts: