இரசாயன ஆலையொன்றில் பாரிய வெடிப்பு!

Friday, July 13th, 2018

சீனாவின் – சிச்சுவான் மாநிலத்தில் இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரான சென்டுவில் அமைந்துள்ள இரசாயன ஆலையொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனிடையே கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் டியன்ஜிங் துறைமுக நகரில் அமைந்துள்ள இரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பின் போது 165 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: