இந்தோனேசியாவில் இயற்கை தாண்டவம்: சுனாமியை அடுத்து எரிமலை சீற்றம்!

Thursday, October 4th, 2018

இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் வெளியிட ஆரம்பமாகியுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 29ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்தான் காரணமாக வீடுகள் இன்றி தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழப்பு 1400 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சுனாமியின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள், சுலவேசி தீவில் உள்ள எரிமலையான (மவுண்ட் சோபூடன் வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் வெளியிட தொடங்கி உள்ளது. எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளதாகவும், இந்த சாம்பல் விமான என்ஜின்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அப்பகுதியில் விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: