இந்திய மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை

Monday, July 3rd, 2017

இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், இந்திய வௌிவிகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இலங்கை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகளையும் விரைவில் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர் கூறியுள்ளார். இதேவேளை, இந்திய மீனவர்கள் 42 பேர் இலங்கை சிறைகளில் உள்ளதாகவும், இந்திய மீனவர்களின் 141 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே, குறித்த மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க இராஜதந்திர ரீதியில், தலையிடுமாறு தமிழக நிதியமைச்சரால், சுஷ்மா சுவராஜிடம் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரால் இந்த பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் அதற்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறவில்லை என, தமிழக நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து நிலையான தீர்வினை வழங்க தேவயைான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜெயக்குமார் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: