இந்திய தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு பாகிஸ்தானில் தடை!
Monday, October 3rd, 2016
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடாத்தப்பட்டதனை தொடர்ந்து இந்தியா தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் முறுகல் நிலையினை அடுத்து இந்தியா திரைப்படங்கள் எதையும் பாகிஸ்தான் நாட்டில் ஒளிபரப்பவும் அந்நாட்டு திரையரங்கங்களுக்கு தடைவிதித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் இந்திய அலைவரிசையான கேபல் தொலைக்காட்சி அலைவரிசைக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ஒளிபரப்பாகும் பட்சத்தில் தகுந்த தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சு சிவப்பு சமிஞ்சை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வங்கதேசத்தில் பேராசிரியர் வெட்டிக் கொலை
போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாமே - ஒப்புக் கொண்டது இஸ்ரேல்!
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் ஆபத்தில்லை - உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ...
|
|