இந்தியாவில் கோர விபத்து : 14 பேர் பலி!

Monday, June 25th, 2018

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் யாதாரி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கால்வாயில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட பெண் தொழிலாளிகள் 14 பேர் பலியாகினார்.

இதன்போது காயமடைந்த 17 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஆந்திர மாநிலம் – கர்னூல் பகுதியில் முச்சக்கர வண்டி மீது பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

ஆலயம் ஒன்றுக்கு யாத்திரிகர்கள் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீதே இவ்வாறு பேருந்து மோதியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த 4 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: