இந்தியாவில் ஒரே நாளில் 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!

Saturday, March 28th, 2020

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து 110 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

இதன் விளைவாக, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது, இந்தியாவில் இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா தற்போது 21 நாள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்நாட்டு நிதி அமைச்சு பாரிய நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது.

Related posts: