இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தத்தை பாராட்டிய பிரித்தானிய பிரதமர்!
Thursday, June 22nd, 2023இண்டிகோ – ஏர்பஸ் ஒப்பந்தம் எங்கள் விமானத்துறைக்கான மிகப்பெரிய வெற்றி என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் Rishi Sunak தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 ‘ஏ320’ ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.இது வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தமாக பார்க்கப்படுவதாக ரிஷ் சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்டிகோ-ஏர்பஸ் இடையிலான இந்த ஒப்பந்தம் பிரித்தானியாவின் விமானத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பிரதமர் ரிஷி சுனக் பாராட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் கூறுகையில்,”இண்டிகோ ௲ ஏர்பஸ் ஒப்பந்தம் எங்கள் விமானத்துறைக்கான மிகப்பெரிய வெற்றி. இது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு பொருளாதாரத்தை வளர்க்க உதவுகிறது” என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|