ஆர்மீனிய பிரதமர் பதவி இராஜினாமா!
Wednesday, April 25th, 2018
ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் பதவி விலகியதை தொடர்ந்து தலைநகர் எரவானில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த இவர் மீண்டும் பிரதமராகும் அவரது முடிவை எதிர்த்து கடந்த 11 நாட்களாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இதனையடுத்தே அவர்பதவி விலக தீர்மானித்தார்.
இந்தநிலையில், துணைப் பிரதமர் கரேன் கராபெட்யான் புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
கனடாவில் பழங்குடியினர் தொடர் தற்கொலை: அவரச நிலை பிரகடனம்!
நியூசிலாந்து தீயில் சிக்கி இலங்கையை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
இலண்டன் மசூதியில் மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல்!
|
|