இரகசிய புலனாய்வு நடவடிக்கை மூலம் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு கைது!

Monday, February 13th, 2017

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குழுவான்று பிரித்தானிய இரகசிய பொலிஸார் ஒருவர் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் ஓல்ட் பெய்லி நீதிமன்றில் நேற்று  விசாரணைக்கு வந்த போது, இந்த குழுவுக்கு தலைமை தாங்கியவராக கருதப்படும் 37 வயதுடைய மொஹமட் அலம்கிர் (Mohammed Alamgir) என்பவருக்கு குறைந்தபட்சம் ஆறு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலம்கிர் மற்றும் குறித்த குழுவில் உள்ள மேலும் நால்வர் லூட்டன் (Luton) எனும் பகுதியில் மேற்கொண்ட உரையாடல்கள் கமால் எனும் பொலிஸ் அதிகாரியால் இரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குழுவை கைது செய்வதற்கு ஏதுவாகவிருந்த இரகசிய பொலிஸாரை ஓல்ட் பெய்லி நீதிபதி பாராட்டியுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

51

Related posts: