ஆசிரியர்களுடன் கைகுலுக்க மறுத்தால் பெற்றோர் தண்டப் பணம் செலுத்த வேண்டும்!
Friday, May 27th, 2016ஆசிரியர்களுடன் கைகுலுக்க மறுக்கும் பிள்ளைகளின் பெற்றோர் 4,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை தண்டமாக செலுத்த வேண்டும் என சுவிட்ஸர்லாந்து பேஸல் பிராந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த 14 வயது மற்றும் 15 வயதுடைய சகோதரர்களான இரு முஸ்லிம் மாணவர்கள், தமது மத பாரம்பரியத்துக்கு முரணானது என்பதால் எதிர்ப்பாலாரான ஆசிரியைகளின் கரத்தைப் பற்றிக் குலுக்க முடியாது என தெரிவித்ததைத் தொடர்ந்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதம் நெருங்கிய குடும்ப உறவினராக இல்லாத எதிர்ப்பாலாரை தொட அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அந்த மாணவர்களின் கருத்தை ஏற்ற தெர்வில் நகரசபைக்குட்பட்ட பிராந்தியத்திலுள்ள குறிப்பிட்ட பாடசாலை, முஸ்லிம் மாணவர்களுக்கு கைகுலுக்குவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பில் பிராந்திய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அந்த அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு ஆசிரியர்களுடன் கைகுலுக்க மறுக்கும் பிள்ளைகளின் பெற்றோர் 5,000 சுவிஸ் பிராங்குகளை (4,000 ஸ்ரேலிங் பவுண்) தண்டமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு ஆசிரியருக்கு தன்னுடன் கைகுலுக்கிக் கொள்ளுமாறு ஒரு மாணவரைக் கோர உரிமை உள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|