அரசியல் தணிக்கைக்கு எதிராக ஹொங்கொங் மக்கள் போராட்டம்!
Sunday, August 21st, 2016
அடுத்த மாதம் நடைபெறுகின்ற சட்டமன்றக் கவுன்சில் தேர்தல்களில் “அரசியல் தணிக்கை” என்று மக்கள் கருதுகின்றவைகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஹொங்கொங் மக்கள் திரண்டு தெருக்களில் போரட்டம் நடத்தியுள்ளனர்.
சுதந்திர ஹாங்காங் என்ற கொள்கைகளை கைவிட்டுவிட்டதாக நிரூபிக்க தவறியிருப்பதால் செப்டம்பர் மாதம் நடைபெறுகின்ற தேர்தலில் ஆறு பேர் போட்டியிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.பிரித்தானியாவின் முன்னாள் பகுதியாக இருந்த ஹாங்காங்கை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறுகிறது. அதனால், ஹாங்காங் சுதந்திரக் கருத்துக்களை தேச விரோத கருத்துக்களாக சீனா பார்க்கிறது
Related posts:
மொரிசியஸ் தீவில் மலேசிய விமான பாகம் கண்டெடுப்பு?
அனைத்து குடிமகனுக்கும் கட்டாய ஊதியம் - சாதனை படைத்த சுவிஸ்!
சுற்றுலாப் பயணிகளின் இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து - 04 பேர் உயிரிழப்பு!
|
|
|


