அரசியல் சாசன நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்த தென்னாபிரிக்க அதிபர் ஸூமா!
Tuesday, September 13th, 2016
பாதுகாப்பு வசதிகளுக்கு அப்பாற்பட்டு, தன்னுடைய சொந்த வீட்டை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திய அரை மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை அதிபர் ஜேக்கப் ஸூமா மீளச் செலுத்தி இருப்பதாக தென்னாப்ரிக்க கருவூலத் துறை தெரிவித்திருக்கிறது.
தன்னுடைய இல்ல கட்டுமானத்திற்காக ஸூமா செலவு செய்த 16 மில்லியன் டாலர்களில் கொஞ்சம் தொகையை திருப்பி செலுத்த வேண்டுமென அரசியல் சாசன நீதிமன்றம் மார்ச் மாதம் ஆணையிட்டது.
நீச்சல் குளம், அரைவட்ட அரங்கு, கோழிக்கூண்டு ஆகியவை புதிதாக கட்டப்பட்ட வசதிகளாகும்.சமீபத்திய லஞ்ச ஊழல்களால், ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏறபட்டுள்ளது.
Related posts:
ஆப்கானிஸ்தானில் செயற்பாடுகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவை சங்கம்!
உலகக் கோப்பை காற்பந்து: அனுமதி வழங்கியதில் ஊழல்!
நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வெளியேற்றுவதில் கடும் சிரமம் - ஐ.நா ...
|
|