அமைதி காக்கவும் – இந்திய பிரதமர் மோடி!

Wednesday, September 14th, 2016

சில தினங்களாக கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக வழந்தள்ள பதட்டநிலைமைகள் தொடர்பாக தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.தற்போது, இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் தமிழக இளைஞர் ஒருவர் கன்னட அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

இந்நிலையில் பதிலுக்கு இராமேஸ்வரத்தில் கன்னட பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார்.இதன் உச்சகட்டமாக பெங்களூருவில் நேற்று தமிழகத்துக்கு சொந்தமான தனியார் பேருந்துகள் 50க்கு மேற்பட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டது.

இச்சம்பவத்தால் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.இதேவேளை வன்முறை பரவாமல் இருக்க தமிழக- கர்நாடக எல்லையில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும். கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ளார்.

பொறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு இருமாநில மக்களும் செயல்பட வேண்டும் என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

06-modi-new-600

Related posts: