அமெரிக்கா வெளியேற்றும் அகதிகளுக்கு ஆதரவு அளிப்போம் – கனேடிய பிரதமர்!
Monday, January 30th, 2017
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பெயரில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அகதிகளை கனடா ஆதரிக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவிததுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் இருந்து வெளியெற்றும் அகதிகளை நாம் அரவனைப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமரின் இந்த வார்த்தைக்கு சர்வதேச தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவர் நேரடியாக அமெரிக்காவை விமர்சிக்கவில்லை என்ற போதிலும் ட்ரம்பிற்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கை அவரின் துணிச்லை காட்டுகிறது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் கனேடிய பிரதமரின் இந்த தீர்மானத்திற்கு கனடா மக்கள் முழு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யெமனில் போர் நிறுத்தம் வியாழனன்று அமுல்!
சசிகலா குடும்பம் குறித்து ஜெயலலிதா பேசியது என்ன?
அயர்லாந்தை புரட்டிப்போட்ட பயங்கர சூறாவளி!
|
|