அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதலில் 11 பேர் பலி!

Saturday, December 22nd, 2018

சோமாலியாவில் அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதலில் அல் ஷபாப் ஆயுத பிரிவைச் சேர்ந்த 11 பேர் பலியாகினர்.

சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கைதா ஆயுததாரிகள் அரச படைக்கெதிராக தொடர்ந்தும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த இரு ஆயுத குழுக்களையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் சோமாலிய இராணுவத்திற்கு அமெரிக்க இராணுவம் உதவியினை வழங்கி வருகின்றது.

ஆயுததாரிகளின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில், சோமாலிய தலைநகர் மொகடிஜூவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெலத் அமின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலிலேயே 11 பேர் பலியாகியுள்ளனர்.

சோமாலியா மற்றும் ஆபிரிக்க ஒன்றிய படைகளுடன் இணைந்து அமெரிக்க படையினர் கடந்த சில மாதங்களாக ஆயுததாரிகளுக்கு எதிராக தரை மற்றும் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: