அமெரிக்கா பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் – நால்வர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயம்!
Thursday, September 5th, 2024
அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயமடைந்தனர்.
குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரை ஜோர்ஜியா காவல்துறையினர் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.
சுமார் 1,900 மாணவர்கள் பயிலும் குறித்த பாடசாலையில் அமெரிக்க நேரப்படி முற்பகல் 10.20 அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
000
Related posts:
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் உத்தர பிரதேசத்தில் 15 பேர் பலி!
பிரித்தானியா விலகுவது உறுதியானது- கையெழுத்திட்ட தெரேசா மே!
காத்மாண்டு விமான நிலையத்தில் பங்களாதேஷ் விமானம் விபத்து: 50 பேர் பலி!
|
|
|


