அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிசூடு- 8 பேர் பலி!
Wednesday, March 17th, 2021அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்றுள்ளன.
ஜார்ஜியாவின் தலைநகர் அட்லாண்டா புறநகர் பகுதியான அக்வொர்த் என்ற இடத்தில் உள்ள விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள மற்றொரு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
அதேபோல் அட்லாண்டாவில் பிரதான சாலையில்; உள்ள ஒரு விடுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கி சூட்டில் நான்கு பேரும், கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிசூடு சம்பவங்கள் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆசிய நாட்டை சேர்ந்த பெண்கள் என தெரிவித்த பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
|
|