அமெரிக்காவில் பனிப்புயல்: விமான சேவை பாதிப்பு!
Monday, March 5th, 2018
அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களை பனிப்புயல் கடுமையாக தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, நியூஹேம்ஷையர், மேரிலாண்ட், ரோடே தீவுகள் ஆகியவற்றின் பல்வேறு நகரங்களை பனிப்புயல் பலமாக தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கடற்கரையோர நகரங்களில் சூறாவளி காற்று காரணமாக மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பனிப்புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை அமெரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூயார்க் நகரில் உள்ள விமான நிலையங்களில் நேற்று முற்றிலும் விமான சேவை இரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவை முடங்கியுள்ளதுடன் மேலும் 2,400 விமானங்களின் வருகை தாமதமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|